Friday 23 August 2013

டி.இ.டி., வினாத்தாள் மோசடி: குற்றவாளியை காவலில் எடுக்க ஏற்பாடு



                          டி..டி.,வினாத்தாள் மோசடி தொடர்பாக, முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து விசாரிக்க, போலீஸார் முடிவு செய்துள்ளனர். டி..டி., வினாத்தாள் மோசடி தொடர்பாக, தர்மபுரி தனிப்படை போலீஸார் தர்மபுரி,
கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த கணபதி, 39 அவரது மனைவி எஸ்டர், 33, மற்றும் கிருஷ்ணப்பா, 42, சந்திரசேகர், 33, அசோகன், 37, இளையராஜா, 30, வெங்கட்செல்வன், 34, அவரது தம்பி சீனிவாசன், 28, ஜேம்ஸ், 41, வெங்கட்ராமன், 29 ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், டி..டி., வினாத்தாள் மோசடியில், சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த கண்ணன் என்பவருக்கு முக்கிய பங்கிருப்பது தெரியவந்தது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்து. இதுகுறித்த விபரங்களை அறிய, தலைமறைவாக உள்ள கண்ணனை தனிப்படை போலீஸார் தேடிவருகின்றனர். மேலும், கண்ணன் குறித்தும், இந்த மோசடியில் தொடர்புடைய முக்கியமானவர்களின் விபரங்களை அறியவும், டி..டி., வினாத்தாள் மோசடியில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இளையராஜாவை கஷ்டடியில் எடுத்து விசாரிக்க, தனிப்படை போலீஸார் முடிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment