Wednesday 28 August 2013

TNTET JUNE 2012 OCTOBER 2012 ஆகிய இரு டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2012
CERTIFICATE VERIFICATION FOR CERTIFICATE NOT PRODUCED AND ABSENT CANDIDATES
                             




          கடந்த ஆண்டு நடந்தஇரு டி..டி.தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள்
உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு,இறுதியாகமீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்துடி.ஆர்.பி.அறிவித்துள்ளது. அதன்படி,செப்., 6, 7 ஆகிய தேதிகளில்சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என,டி.ஆர்.பி.தெரிவித்துள்ளது.
டி.ஆர்.பி.தலைவர்விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு:
                               
கடந்த ஆண்டுஜூலை, 12 மற்றும் அக்டோபர், 14 ஆகிய தேதிகளில்டி..டி.தேர்வுகள் நடந்தன. இதற்கான சான்றிதழ் சரிபார்ப்புமுறையேகடந்த ஆண்டுசெப்., 7, 8 மற்றும் நவம்பர், 6முதல் 9ம் தேதி வரை நடந்தன. இதில் பங்கேற்காத தேர்வர்கள் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நாளன்றுஉரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்களுக்குமீண்டும் ஒரு இறுதி வாய்ப்பு வழங்கும் வகையில்வரும்செப்., 6, 7 ஆகிய தேதிகளில்சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்.இந்நிகழ்வுசென்னைஅசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படும். கடந்த ஆண்டு,நவம்பர், 9ம் தேதி அன்றுஇடைநிலைபட்டதாரி ஆசிரியர் பணிக்கு,உரிய முழுமையான கல்வித்தகுதியை பெற்றிருந்துஉரிய பட்டயச் சான்றுபட்டச் சான்றுமதிப்பீட்டிற்கான சான்று மற்றும் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றை சமர்ப்பிக்கத் தவறியவர்களுக்கு மட்டும்,இந்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஏற்கனவே நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஆவணங்கள் அடிப்படையில்சம்பந்தப்பட்ட தேர்வர்களின் பதிவு எண்கள்டி.ஆர்.பி.இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன. கடந்தஇரண்டுடி..டி.தேர்வுகளில்,தேர்ச்சிக்குரியகுறைந்தபட்ச மதிப்பெண்கள் பெற்று,சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறியவர்களின் விவரங்கள்,இணையதளத்தில் தரப்பட்டுள்ளன. தேர்வர்கள்பதிவு எண்களை சரிபார்த்துஅதில் அழைக்கப்பட்டுள்ளவர்கள் மட்டும்சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்கலாம். தற்காலிக அடிப்படையில் தான்,தேர்வர்அழைக்கப்படுகின்றனர். பெயர் விடுபட்டு இருந்தால்,டி.ஆர்.பி.தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறுவிபு நய்யார் தெரிவித்துள்ளார்.

                            கடந்த ஆண்டு நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளுக்குப் பிறகேபல தேர்வர்களுக்குசான்றிதழ்கள் கிடைத்தன. அவர்கள்அப்போதைய டி.ஆர்.பி.தலைவர்சுர்ஜித் சவுத்ரியிடம்பல முறை முறையிட்டும்,அவர்தேர்வர்களின் கோரிக்கைகளை ஏற்கவில்லை. இதனால்,வேலை வாய்ப்பை பெறும் நிலையில் இருந்த பலர்சான்றிதழ் இல்லாததன் காரணமாகவேலை வாய்ப்பை இழந்தனர். பல பெண்கள்கண்ணீர் விட்டு கதறினர். எனினும்தேர்வர்களின் நியாயமான கோரிக்கைகள்கடைசிவரை பரிசீலிக்கப்படவில்லை. இந்நிலையில்எட்டு மாதங்களுக்குப்பின்டி.ஆர்.பி.,யின் புதிய தலைவராக பதவி ஏற்ற குறுகிய நாட்களிலேயேதகுதி வாய்ந்த தேர்வர்களுக்குவிபு நய்யார்வாய்ப்பு அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம்தகுதி வாய்ந்த தேர்வர்களுக்கு,வேலை வாய்ப்பு கிடைக்கும் நிலை உருவாகி உள்ளது.

No comments:

Post a Comment