தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் நடத்தும் இந்தஆண்டிற்கான பிஎட் தேர்வை மே 29ம் தேதி தொடங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை சுமார் 70 ஆயிரம் பேர் எழுத உள்ளனர்.தமிழகத்தில் சுயநிதி
கல்வியியல் கல்லூரிகள் தவிர 665கல்வியியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக் கல்லூரிகளில்வழக்கமாக இறுதித் தேர்வுக்கு பின்னர் செய்முறைத் தேர்வுகள்நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, இறுதி தேர்வுக்கு முன்னதாகவே செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டு விட்டன. இதையடுத்து,ஆண்டு இறுதி தேர்வுக்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் விஸ்வநாதன்தலைமையில் ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் செய்துவருகிறது.மே 29ம் தேதி தேர்வுகளைத் தொடங்கி ஜூன் 10ம் தேதிக்குள்முடிக்கும் வகையில் தேர்வுக்காண அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் சுமார் 70 ஆயிரம் ஆசிரியர் பயிற்சிகல்லூரி மாணவ, மாணவிகள் இத்தேர்வுகளை எழுத உள்ளனர். தேர்வுநடத்துவதற்காக 5 அல்லது 6 கல்வியியல் கல்லூரி மாணவர்களுக்குஒரு தேர்வு மையம் அமைக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. தேர்வு மையங்களை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. செய்முறைத் தேர்வுநடத்தி முடிக்கப்பட்டு விட்டதால் தேர்வு முடிந்ததும் கல்வித்துறைநடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வை எழுத மாணவர்களுக்கு நல்லவாய்ப்பாக அமையும் என கல்வியாளர்கள் தெரிவித்தனர். இதனிடையேதன்னாட்சி கல்வியியல் கல்லூரிகளும் தனியாக அட்டவணை தயாரித்துதேர்வு நடத்த ஆயத்தமாகி வருகின்றன..
No comments:
Post a Comment