Friday 5 July 2013

9,900 ஐ.ஐ.டி., இடங்களுக்கு 14 ஆயிரம் பேர் போட்டி



            ஐ..டி., மற்றும் .எஸ்.எம்., (தன்பாத்) கல்வி நிறுவனங்களில் உள்ள, 9,900 இடங்களுக்கு, 14 ஆயிரம் பேர் போட்டியிடுகின்றனர். ..டி., சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன. ..டி., - என்..டி., ஆகிய உயர் கல்வி
நிறுவனங்களில், மாணவர் சேர்க்கைக்கு, இந்தாண்டு ஜெ..., என்ற கூட்டு நுழைவுத் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நுழைவு தேர்வு, "ஜெ..., மெயின், அட்வான்ஸ்" என இரு கட்டங்களாக ஏப்ரல் மாதம் நடந்தது. ஜெ..., மெயின் தேர்வை, 13 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்வு பெற்ற, 1.50 லட்சம் பேர், ஜூன் மாதம் நடந்த, ஜெ..., அட்வான்ஸ் தேர்வில் பங்கேற்றனர். இத்தேர்வில், நாடு முழுவதும், 21,110 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களில், சென்னை, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய சென்னை மண்டலத்தில், 3,500 பேர் தேர்ச்சி பெற்றனர். ஜெ..., நுழைவு தேர்வில், 21 ஆயிரம் மாணவர் தேர்வு பெற்ற நிலையில், "கட்-ஆப்&' மதிப்பெண் அடிப்படையில், 14 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டனர்.
                       
சென்னை, மும்பை, டில்லி, கான்பூர் உள்ளிட்ட, 16 ..டி.,க்கள் மற்றும் .எஸ்.எம்., (தன்பாத்) ஆகிய கல்வி நிறுவனங்களில் உள்ள, 9,985 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, நேற்று துவங்கியது. ..டி., சென்னையில் மொத்தம், 838 இடங்கள் உள்ளன. சென்னை மண்டலத்தில் தேர்வு பெற்ற, 3,500 மாணவர்களுக்கு கலந்தாய்வு, ..டி., சென்னையில் நடந்து வருகிறது. நேற்றும், இன்றும் (5ம் தேதி) பொது பிரிவினருக்கான கலந்தாய்வும், 6ம் தேதி எஸ்.., - எஸ்.டி., மாணவர்களுக்கான கலந்தாய்வும், 7ம் தேதி மற்றும் 8ம் தேதி, மற்ற பிரிவினருக்கான கலந்தாய்வும் நடக்க உள்ளது
.

No comments:

Post a Comment