Monday 1 July 2013

தொழிலாளர் சேமநல நிதியில் புதியமுறை



               தொழிலாளர் சேமநல நிதியை மாற்றுவது மற்றும் அதிலிருந்து பணம் பெறுவது போன்றவை, இந்த மாதம் முதல் வாரம் முதல், ஆன்-லைன் முறையில் நடைபெறஉள்ளனஇதுதொடர்பாக, தொழிலாளர் சேமநல
நிதி அமைப்பின், மத்திய சேமநல நிதி ஆணையர் ஜலான் கூறியதாவது: தொழிலாளர் சேமநல நிதி அமைப்பில், ஐந்து கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். இவர்கள் தங்களின் கணக்கில் உள்ள நிதியை மாற்றுவது மற்றும் அதிலிருந்து பணம் பெறுவது போன்றவற்றை, தற்போது, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கொடுத்து, அதன்மூலம் பெறுகின்றனர். வரும், 3 அல்லது 4ம் தேதி முதல், விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தே, இந்த பணிகளை முடித்துக் கொள்ளலாம். இவ்வாறு, ஜலான் கூறினார்.

No comments:

Post a Comment