Tuesday 2 July 2013

தமிழக அரசு ஊழியர்களுக்கான வருங்கால வைப்பு நிதி கணக்குச் சீட்டு குறித்த அறிவுறுத்தலை மாநில கணக்காயர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

இது குறித்து துணை மாநில கணக்காயர் (நிதிவர்ஷினி அருண் திங்கள்கிழமைவெளியிட்ட அறிவிப்பு:தமிழக அரசு ஊழியர்களுக்கான கடந்த நிதியாண்டின் பொதுவருங்கால வைப்பு நிதியின் வருடாந்திர கணக்கு அறிக்கை ஜூலை 
முதல் வாரம்முதல் மாநில முதன்மை கணக்காயர் அலுவலகத்தில் இருந்து அனுப்பப்பட உள்ளன.இந்த அறிக்கை சம்பந்தப்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்குஅனுப்பப்படுகின்றன.பொது வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்கள் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதியன்று எந்தஅலுவலகத்தில் பணியாற்றினார்களோஅந்த அலுவலக பணம் பெற்று வழங்கும்அலுவலரை அணுகி அவரவர் கணக்கு அறிக்கையை பெற்றுக் கொள்ளலாம்.கணக்கு அறிக்கையில் ஏதேனும் மாறுபாடுகள் காணப்பட்டால் அது குறித்ததகவல்களை மாநில கணக்காயர் அலுவலகத்துக்கு உடனடியாகத் தெரிவிக்கவேண்டும்மேலும்சந்தாதாரர் அல்லது வாரிசுதாரர்கள் தகவல் பரிமாற்றத்துக்கானதங்களது செல்பேசி எண் மற்றும் முழு முகவரி ஆகியவற்றை அனைத்துக் கடிதத்தொடர்புகளிலும் தவறாமல் குறிப்பிடவும்.
அதேபோன்றுபணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் தங்கள் அலுவலகத்தின் முழுமுகவரிதொலைபேசிசெல்பேசி-மெயில் ஆகிய தகவல்களை  தங்களின்அனைத்துக் கடித தொடர்புகளிலும் தவறாமல் குறிப்பிட வேண்டும்.தகவல்கள் தெரிவிக்க...044-24314477. இணையதளம்www.agae.tn.nic.in  நேரடிக் கடிதம்மூலம்வர்ஷினி அருண்துணை மாநில கணக்காயர் (நிதி), மாநில முதன்மைக்கணக்காயர் அலுவலகம் (கணக்கு மற்றும் பணி வரவு), 361, அண்ணாசாலை,சென்னை-600 018.

No comments:

Post a Comment