Saturday 5 October 2013

மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் வழங்க வேண்டும்



                  "மலேசியாவைப் போல் தமிழகத்திலும் பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தங்களுடன் திருக்குறளை வழங்க வேண்டும்" என, திருக்குறள் பேரவை பழனியப்பன் கூறினார். அவர் வெளியிட்ட அறிக்கை: "மலேசியா நாட்டில் மலாய் மொழியில் மொழி பெயர்க்கப்பட்ட திருக்குறளை அந்த
நாட்டின் அரசு மாணவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் மாணவ, மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக பல்வேறு விலையில்லா பொருள்களையும், பாடநூல்களையும் அரசு வழங்குகிறது. இதுபோல வரும் கல்வியாண்டில் நல்ல உரையாசிரியர்களுடன் கூடிய திருக்குறளை முதல் கட்டமாக, ஐந்து மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்." இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment