"தீபாவளி பண்டிகை முன்பணத்தை அரசு அதிகரித்து வழங்க வேண்டும்,' என, ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆசிரியர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. தற்போது, பொருட்களின் விலை உயர்வை கருத்தில்கொண்டு, ரூ.20 ஆயிரம் அல்லது ஒரு மாத
சம்பளமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உயர்நிலை மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர் சங்க செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ""அரசு வழங்கும் முன் பணத்தை, ஒவ்வொரு மாதத்திலும், ஆசிரியர்களின் சம்பளத்தில் அரசு பிடித்தம் செய்கிறது. இப்போது, பொருட்கள் விற்கும் விலைக்கு ரூ.5 ஆயிரத்தை வைத்து ஒரு செலவையும் ஈடுசெய்யமுடியாது. ரூ.20 ஆயிரமாக உயர்த்தி வழங்கினால், பண்டிகைகளை சிறப்பாக கொண்டாடலாம்,'' என்றார்.
No comments:
Post a Comment