Tuesday 8 October 2013

தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை


           முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப
கொள்ள முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முக்கிய செய்தி :
                 முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் இவர்கள் பணிசெய்வார்கள். தொகுப்பூதியத்தில் ஆசிரியர்கள் நியமனம் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் சம்பளம் பெறுவார்கள்.இந்த நியமனத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே உடனடியாக மேற்கொள்ளலாம். முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரந்தர பணியிடங்கள் நிரப்பப்படும் வரையில் எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்2 மாணவர்களை அரசு தேர்வுக்கு தயார் செய்வதற்கு தற்காலிகமாக அடிப்படையில் முதுகலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் நிரப்ப கொள்ள முதல்அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
               இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலனை கருதி முதல்அமைச்சர் ஜெயலலிதாஅரசு மற்றும் நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்கள்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் உடனடியாக நிரப்ப ஆணையிட்டுள்ளார்கள். பொதுத்தேர்வு எழுதும் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்பு மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்கள் அந்த தேர்வுக்கு தயார்செய்வதற்கு இந்த ஆணை மிகவும் உறுதுணையாக அமையும்.

தற்போதைய நிலையில் அரசு உயர்நிலைப்பள்ளிகள்அரசு மேல்நிலைப்பள்ளிகள்நகராட்சி உயர்நிலைப்பள்ளிகள்நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் ஆங்கிலம்கணிதம்அறிவியல் ஆகிய பாடங்களில் காலியாக உள்ள 2,645 முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மாதம் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நிரப்பப்படும்.

                    அதுபோல 3 ஆயிரத்து 900 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்களை மாதம் ரூ.4 ஆயிரம் தொகுப்பூதிய அடிப்படையில் தற்காலிகமாக நிரப்ப அனுமதி அளித்தும் இதற்கான நிதி ரூ.20 கோடியே 18 லட்சம் ஒதுக்கீடு செய்தும் முதல்அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இந்த நியமனத்தை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் துணையோடு உடனடியாக மேற்கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment