Tuesday 8 October 2013

10-ஆம் வகுப்பில் குறைவான தேர்ச்சி: 1000 பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு பயிற்சி.

        பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்றஆயிரம் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது.சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 113பள்ளிகளின்
தலைமையாசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி செவ்வாய்க்கிழமை (அக்.8) வழங்கப்படுகிறது.இதுபோலஒவ்வொரு மாவட்டத்திலும் மிகக் குறைவான தேர்ச்சி விகிதம் கொண்ட பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பகுதி வாரியாக இந்தப் பயிற்சி வழங்கப்படும்.பள்ளியை எப்படி நிர்வகிப்பதுகற்பித்தலை மேம்படுத்த என்னென்ன நடவடிக்கைகளை எடுப்பதுபள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கமேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக நிபுணர்களைக் கொண்டு பயிற்சி அளிக்கப்படும்.இத்தகைய பயிற்சிகளின் மூலம் பள்ளியின் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க முடியும் என அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட இயக்குநர் .சங்கர் கூறினார்.

No comments:

Post a Comment