Friday 5 July 2013

ரூ3.69 கோடிக்கு விண்ணப்பம் விற்பனை இணையதளத்தில் மட்டுமே ஹால் டிக்கெட் வெளியீடு



                ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்பங்கள் ரூ3.69 கோடிக்கு விற்பனையாகி உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டுக்கான
ஆசிரியர் தகுதி தேர்வு ஆகஸ்ட் 17,18ம் தேதிகளில் நடக்கிறது. 1 முதல் 5ம் வகுப்பு வரை பணியாற்ற தாள்,1, 6 முதல் 8ம் வகுப்பு வரை பணியாற்ற விரும்பும் பட்டதாரிகள் தாள்,2 தேர்வுகளை எழுத வேண்டும். தாள்,1 தேர்வு ஆகஸ்ட் 17ம் தேதியும், தாள்,2 தேர்வு 18ம் தேதியும் நடக்கிறது. இந்த தேர்வுக்கான விண்ணப்பங்கள் அனைத்து அரசு மேல் நிலைப்பள்ளிகளிலும் கடந்த 17ம் தேதி முதல் 1ம் தேதி வரை விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 7 லட்சத்து 38 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனையாகியுள்ளது. 6 லட்சத்து 85 ஆயிரம் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ழீ3 கோடியே 69 லட்சம் கிடைத்துள்ளது. முதல் தாளுக்கு 2 லட்சத்து 65 ஆயிரத்து 568 பேரும், இரண்டாம் தாளுக்கு 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேரும் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்தும் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ள ஆசிரியர் வாரியத்துக்கு கொண்டு வரப்பட்டன. சில வாரங்களில் விண்ணப்பங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு அதில் உள்ள தகவல்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்படும். விண்ணப்பதாரர்களுக்கு ஹால் டிக்கெட் இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்று தேர்வு வாரியம் தெரிவித்துள்ளதுதேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்களை ஆகஸ்ட் முதல் வாரத்தில் www.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு 6 லட்சத்து 56 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த ஆண்டு கூடுதலாக 29 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

No comments:

Post a Comment