Thursday 11 July 2013

நெல்லை பல்கலை.,யில் பி.எட்.,படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு


                 நெல்லை பல்கலை., தொலைநெறி தொடர்கல்வி இயக்ககத்தின் மூலம் பி.எட்., படிப்பிற்கான விண்ணப்பங்கள் மாணவ, மாணவிகளிடம் இருந்த வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து தொடர் கல்வி
இயக்குனர் சவுந்திரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: "நெல்லை பல்கலை.,கழக தொலை நெறி தொடர்கல்வி இயக்ககம் பி.எட்.,படிப்பிற்கான விண்ணப்பம் மாணவ, மாணவிகளிடம் இருந்து வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பங்கள் பல்கலை., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தை இணையதளம் மூலம் பெற்றுக்கொண்டு படிவத்தை பூர்த்தி செய்து, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பவர் ஜோதி அக்கவுண்ட் எண் 32723644765 மூலம் 650 ரூபாயை செலுத்தி அதற்குரிய ரசீதினை பெற்று விண்ணப்பத்துடன் இணைத்து, இயக்குனர், தொலைநெறி தொடர்கல்வி இயக்ககம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், நெல்லை-627 012 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

                                  டிகிரி முடித்தபின் ஏதேனும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளியில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் பெற்ற இருபாலின ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். வரும் 12ம் தேதிக்குள் விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment