Wednesday 3 July 2013

கைரேகை சான்று அளித்தால் மட்டுமே சிம் கார்டு வாங்க முடியும்

சிம் கார்டுகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்பதற்காகசிம் கார்டு வாங்குபவர்கள் உடல்சார்ந்த சான்று அளிக்கும் திட்டத்தைமத்திய அரசு கொண்டு வர உள்ளதுமத்திய உள்துறைஅமைச்சகம்தொலைத்தொடர்புத் 
துறைக்கு அளித்த பரிந்துரையின்பேரில் மொபைல் போன் வாடிக்கையாளர்கள்தாங்கள் வாங்கிய சிம்கார்டு நம்பர் செயல்பாட்டிற்கு வருவதற்கு முன் கைரேகை அல்லதுஉடல்சார்ந்த ஏதேனும் ஒரு சான்றை கட்டாயமாக அளிக்க வேண்டும்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சக பரிந்துரை:
உள்துறை அமைச்சகம் தொலைத்தொடர்பு துறைக்கு அளித்துள்ளபரிந்துரையில், ‌மொபைல் வாடிக்கையாளர்கள் குறித்த உடல்சார்ந்தசான்றிதழ் புள்ளிவிபரமாக கையாளப்பட வேண்டும் எனதெரிவிக்கப்பட்டுள்ளதுதேசிய பாதுகாப்பு நோக்கில்தேசிய புலனாய்வுஅமைப்பகத்துடன் இணைந்து அனைத்து வாடிக்கையாளர்களிடமும்உடல்சார்ந்த சான்று சேகரிக்கப்பட உள்ளதுஇந்த புதிய திட்டம் குறித்துதொலைத் தொடர்புத்துறைதொலைத்தொடர்பு நிறுவனங்கள் உள்ளிட்டபங்குதாரர்களிடம் ஆலோசனை நடத்தி வருகிறதுஅதிக சிம்கார்டுகளை விற்க வேண்டும் என விற்பனையாளர்களிடம் நிலவும் கடும்போட்டியில் உடல்சார்ந்த சான்று சரிபார்ப்பது எளிதான காரியம் அல்லஎன தொலைத் தொடர்புத்துறை நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
தவறான பயன்பாடு :
மும்பை பயங்கரவாத தாக்குதலுக்கு பின் சிம் கார்டு விற்பனையில்அதிக கெடுபிடி கொண்டு வரப்பட்டுள்ளதுமும்பை தாக்குதலில் ஈடுபட்டலக்ஷர்  தொய்பா பயங்கரவாத அமைப்பினர் உள்ளூர் ஆட்களைதொடர்பு கொள்ள இந்திய சிம் கார்டுகளை பயன்படுத்தியதுவிசாரணையில் தெரிய வந்ததுமேலும் போலி ஆவணங்கள் மூலம்இவர்கள் இந்த சிம் கார்டுகளை பெற்றதும் விசாரணையில்கண்டுபிடிக்கப்பட்டதுமொபைல் வாடிக்கையாளர்களிடம் சிம் கார்டுவிற்பனைக்கு முன் உடல்சார்ந்த சான்றுகளை பெற தொலைத்தொடர்புதுறை முடிவு செய்திருந்ததுஆனால் சிம் கார்டு தொடர்பாகவிற்பனையாளர்களிடம் இருந்து நாடு முழுவதும் ஏராளமான புகார்கள்வந்து கொண்டு இருந்தனஇந்த உத்தரவு முறையாகவும்கடுமையாகவும் பின்பற்றாததே இதற்கு காரணம் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு நடவடிக்கை :

இந்த திட்டம் குறித்து கடந்த மாதம் நடைபெற்ற உள்நாட்டு பாதுகாப்புகுறித்த மாநில முதல்வர்கள் மாநாட்டில் ஆலோசனைசெய்யப்பட்டுள்ளதுவிநியோகஸ்தர்கள் மற்றும் விற்பனையாளர்களின்அலட்சியம் காரணமாகவே சிம் கார்டுகள் பயங்கரவாதிகள் மற்றும்சமூக விரோதிகளிடம் உரிய ஆவணங்கள் இல்லாது அல்லது போலிஆவணங்கள் பெறப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக அம்மாநாட்டில்கூறப்பட்டதுஅதை தொடர்ந்து கை விடப்பட்ட இந்த திட்டம்மே 15ம்தேதி டில்லி போலீஸ் கமிஷ்னர் நீரஜ்குமார் உள்துறை அமைச்சகத்திற்குஎழுதிய கடிதத்தில் இந்த திட்டத்தை மீண்டும் கொண்ட வரவலியுறுத்தினார்விற்பனையாளர்கள் ஒரே சமயத்தில் அதிகளவிலானசிம் கார்டுகளை ஒரே நபரிடம் விற்பனை செய்வதே அந்த சிம் கார்டுகள்குற்றவாளிகளின் கையில் சென்று நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்தைஏற்படுத்துகிறது என குறிப்பிட்டுள்ளார்மேலும் மொபைல் போன்கள்மூலமே அதிகளவிலான சைபர் குற்றங்கள் நடைபெறுவதால் அவற்றைதடுக்க இந்த திட்டம் அத்யாவசியமாகிறது எனவும் தெரிவித்துள்ளார்.மேலும் தொலைத் தொடர்பு துறையும்டிராய் அமைப்பும் சிம் கார்டுவிற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும்எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:

Post a Comment