Friday 5 July 2013

கல்வி முறையில் மாற்றம்: உச்ச நீதிமன்றம் விருப்பம்



                        "நாட்டில் கல்வியறிவு உயர்ந்துள்ளது; எனினும், நம் கல்வி முறை குறிக்கோளை எட்டவில்லை; எனவே, கல்வி முறையை சீரமைக்க வேண்டும் என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநில அரசு பிறப்பித்த
உத்தரவை எதிர்த்து, மகரிஷி மகேஷ் யோகி விஸ்வ வித்யாலயா என்ற கல்வி நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில், வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு, நீதிபதிகள், இப்ராகிம் கலிபுல்லா மற்றும் பி.எஸ்.சவுகானைக் கொண்ட, "டிவிஷன் பெஞ்ச்" முன் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியதாவது: கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை, முந்தைய நிலையை விட, இப்போது அதிகரித்துள்ளது. கல்வியறிவு குறைவாக இருந்த போது, மனித மாண்பு சிறப்பாக இருந்தது. இப்போது, கல்வியறிவு அதிகரித்து உள்ளது; மனித மாண்பு குறைந்து விட்டது. இதற்கு காரணம், கல்வி முறையில் உள்ள சிக்கல் தான். கல்வி கற்பதற்கான குறிக்கோள் எட்டப்படவில்லை; எனவே, நாட்டின் கல்வி முறையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment