தமிழ்நாடு
முதுகலை பட்டதாரி
ஆசிரியர் கழக மாவட்ட
செயற்குழு கூட்டம்
தலைவர் சந்திரன்
தலைமையில் நடந்தது.
செயலாளர் உக்கிரபாண்டி
வரவேற்றார். பிரசார
செயலாளர் சுரேஷ், துணை
தலைவர் பாஸ்கரன்
முன்னிலை
வகித்தனர்.
தரம் உயர்த்தப்பட்ட
மேல்நிலை பள்ளிகளுக்கான
கலந்தாய்வு முறைகேடுகள்
கண்டிக்கத்தக்கது; சம்பள
உயர்வு தொடர்பான
3 நபர் குழு
அறிக்கை, முதுகலை
பட்டதாரி ஆசிரியர்களுக்கு
ஏமாற்றம் அளிக்கிறது; ஆசிரியர்களின்
பத்து மற்றும்
பிளஸ் 2 சான்றிதழ்களின்
"உண்மைத் தன்மை"
வழங்கும் அதிகாரத்தை,முதன்மை
கல்வி அலுவலர்களுக்கு
வழங்க வேண்டும்.
பணிநீக்கம்
செய்யப்பட்ட 652 கணினி
ஆசிரியர்களுக்கு மீண்டும்
பணி வழங்க
வேண்டும்; ஆசிரியர்
மற்றும் ஆசிரியர்
அல்லாத காலி
பணியிடங்களை நிரப்ப
வேண்டும், என
தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் பழனிவேல்ராஜன்
நன்றி கூறினார்.
No comments:
Post a Comment