Wednesday 18 September 2013

போலி சான்­றிதழ் ஆசி­ரி­யர்கள் 9 பேர் விரைவில் பணி நீக்கம் ஓரிரு நாளில் கைது நட­வ­டிக்கை


             போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்து மாந­­ராட்சி பள்­ளி­களில் ஆசிரியர்க­ளாக உள்ள ஒன்­பது பேர் விரைவில் பணி நீக்கம் செய்­யப்­பட உள்ளனர். ஓரிரு நாளில் அவர்கள் கைது செய்­யப்­­டுவர் என, மாந­­ராட்சி வட்டாரங்கள் தெரி­வித்­தன. சென்னை மாந­­ராட்சி
பள்­ளியில் பணி­பு­ரியும் இடை­நிலை ஆசி­ரி­யர்கள் பலர் போலி சான்­றிதழ் மூலம் பணியில் சேர்ந்­தி­ருக்கும் அதிர்ச்சி தகவல் சமீ­பத்தில் வெளி­யா­னது
              இது­கு­றித்து எழுந்த புகாரை தொடர்ந்து மாந­­ராட்சி கல்வி துறை அதி­கா­ரிகள் விசாரித்தனர்இதில், முதல்­கட்­­மாக சந்­தேக வலையில் இருந்த 76 ஆசி­ரி­யர்­களின் சான்­றி­தழ்கள் ஆய்வு செய்­யப்­பட்­டன. அவற்றில், ஒன்­பது பேரின் சான்­றி­தழ்கள் போலி என, உறு­தி­யா­னது. இந்த ஒன்­பது பேரும் 10ம் வகுப்பு பொதுத்­தேர்வு சான்­றிதழ் முதல் ஆசிரியர் பயிற்சி சான்­றிதழ் வரை பல்­வேறு கட்டங்­களில் போலி சான்­றி­தழ்­களை வழங்­கி­யுள்­ளனர். ஐந்து ஆசி­ரி­யர்கள், 10ம் வகுப்பு பொதுத்­தேர்வில் தேர்ச்சி பெற­வில்லை. மறு­தேர்வு எழுதி அதிலும் தேர்ச்சி பெறாமல், தேர்ச்சி பெற்றதாக போலி சான்­றிதழ் வழங்­கி­யுள்­ளனர். பிளஸ் 2 தேர்வில் நான்கு ஆசி­ரி­யர்கள் தேர்ச்சி பெற­வில்லை. ஆனால், தேர்ச்சி பெற்­­தாக போலி சான்­றிதழ் வழங்­கி­உள்­ளனர். ஆறு ஆசி­ரி­யர்கள் ஆசி­ரியர் பட்­டய பயிற்சி பெற்­­தாக வழங்­கி­யுள்ள சான்­றி­தழ்கள் போலியானவை.

             இதை­­டுத்து, மாந­­ராட்சி நிர்­வாகம் கல்வி அதி­காரி ரவிச்­சந்­திரன் மூலம் கடந்த சில தினங்­­ளுக்கு முன் போலீஸ் கமி­­­ரிடம் புகார் அளித்­தது. அதன் அடிப்­­டையில் ஆசி­ரி­யர்கள் ஒன்­பது பேர் மீதும் வழக்கு பதிவு செய்து, ஓரிரு நாளில் கைது நட­­டிக்கை எடுக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கப்­­டு­கி­றது. இதற்­கி­டையே, அவர்­­ளுக்கு நோட்டீஸ் வழங்கி, பணி நீக்கம் செய்ய முடிவு செய்து, அதற்­கான பணியில் மாநக­ராட்சி இறங்­கி­யுள்­ளது. ஒன்­பது போலி ஆசி­ரி­யர்கள் பெயரை மாநகராட்சி அதிகா­­பூர்­­மாக வெளியிட­வில்லை. தொடர் விசா­­ணையில் போலி சான்றிதழ் ஆசி­ரி­யர்கள் இன்னும் சிலர் சிக்குவர் என, எதிர்­பார்க்­கப்­­டு­கி­றது. மேலும், தற்­போது சிக்­கி­யுள்­­வர்கள் அனை­வரும், 1996ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்­டுக்குள் பணியில் சேர்ந்தவர்கள். இவர்கள் உயர் அதி­கா­ரி­­ளுக்கு கணி­­மான தொகையை லஞ்­­மாக கொடுத்து பணியில் சேர்ந்­தி­ருக்­கலாம் என்று கூறப்­­டு­கி­றது. இதனால் அப்­போது மாந­­ராட்சி கல்வி துறையில் யார், யாரெல்லாம் அதிகாரி­­ளாக பணி­பு­ரிந்­தார்­களோ அவர்­களும் விசா­ரணை வளை­யத்­திற்குள் வருவார்கள் என்று எதிர்­பார்க்­கப்­­டு­கி­றது.

No comments:

Post a Comment