Saturday, 7 September 2013

பள்ளி காலாண்டு தேர்வு நாட்களில் ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கத்தடை: பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை



            காலாண்டு தேர்வை தொடர்ந்துஅந்த நாட்களில்ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்கபள்ளி கல்வி துறை இணை இயக்குனர் தடை விதித்துள்ளார். தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 6, 78910 ம் வகுப்புகளுக்கு
செப்.12பிளஸ் 1பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்.10 முதல் செப்.21 வரைகாலாண்டு தேர்வுகள் நடக்க உள்ளன. பத்தாம் வகுப்புபிளஸ் 2 மாணவர்களுக்கான வினாக் களை,அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்குதேர்வு துறையால் "சிடிஅனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே,பள்ளி கல்வி இணை இயக்குனர் ஆர். ராஜேந்திரன்அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,""காலாண்டு தேர்வுகள் நடைபெறும் நாட்களில்,ஆசிரியர்கள்தலைமையாசிரியர்கள் விடுமுறை எடுக்கக்கூடாது. பள்ளிகளுக்கு பாதுகாப்பான முறையில் வினாத்தாள் கொண்டு செல்லப்படுவதைமாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள்,முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும்,'' என,குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment