Thursday 19 September 2013

இரட்டைப்பட்டம் வழக்கு இன்று விசாரணைக்கு வரவில்லை



           இன்றைய வழக்கு பட்டியலில் வரிசை எண்.34ல் பட்டியலிடப்பட்டது. நீதியரசர்கள் ராஜேஷ் அகர்வால் மற்றும் சத்தியநாராயணன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு இன்று மாலைக்குள் என்று எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் இன்றைய மதியம் 3மணிவரை வழக்கு பட்டியல் வரிசை
எண்.26 உடன் முடித்து சில அலுவல் காரணமாக தலைமை நீதிபதி சென்றுவிட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பும் தயாராக இருந்த நிலையில் எதிர்ப்பாரா நிகழ்வாக தள்ளி போனது ஏமாற்றமே, எனினும் இவ்வழக்கு நாளை கொண்டுவருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால் அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்டம் சார்பான தீர்ப்பு மீண்டும் தள்ளிபோகியுள்ளது என்பது பதவி உயர்வு மற்றும் புதிய நியமனத்திற்காக காத்திருக்கும் ஆசிரியர்களுக்கு ஏமாற்றமே!

No comments:

Post a Comment