Wednesday 2 January 2013

பள்ளி பாட நன்னெறி கல்வி திட்டத்தில் மாற்றம் செய்ய வலியுறுத்தல்


                                 பள்ளி பாடங்களில்நன்னெறி புகட்டும் கருத்துகளையும்,பெண்களை மதிக்கும்  மனப்பான்மையை வளர்க்கும்பாடங்களையும்புகுத்த வேண்டும்எனமனித  வள மேம்பாட்டு துறைக்குபிரதமர்அலுவலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. சமீப காலமாகபெண்களுக்கு எதிரானபாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளதால்
கலக்கம் அடைந்துள்ள மத்திய அரசுகல்வி முறையில்  மாற்றம் செய்ய முடிவுசெய்துள்ளதுபெண்களின் பாதுகாப்பிற்கானநடவடிக்கைகள் குறித்துபிரதமர் அலுவலகத்திற்குஅனுப்பப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில்சில முயற்சிகளைபிரதமர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.சில ஆலோசனைகளைமனித வள மேம்பாட்டு துறைக்குபிரதமர் அலுவலகம் அனுப்பி வைத்துள்ளது.அதில்பள்ளி கல்வியிலேயேபெண்களை மதிக்கும் மனப்பான்மையைமாணவர்கள் மத்தியில் வளர்ப்பதற்கான நடவடிக்கைகள் அவசியம் எனவலியுறுத்தப்பட்டுள்ளது.
அதற்காகபாட திட்டங்களில் மாற்றம் செய்துநன்னெறி கதைகள்அறிவுரைகள்பெண்களை மதிக்கும் மனப்பான்மையை வளர்க்கும் பாடங்களைபள்ளிப்  பாடங்களிலேயே புகுத்த வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டுள்ளதுஇந்த ஆலோசனைகளைமத்திய மனித வள மேம்பாட்டு துறைசி.பி.எஸ்.., -என்.சி..ஆர்.டி., மற்றும் மாநில கல்வி வாரியங்களுக்குகடிதம் மூலம்  தெரியப்படுத்தியுள்ளது.டில்லி சம்பவம் நடப்பதற்கு முன்பேமாணவர்களுக்கு  அறநெறி சார்ந்தபாடங்களைஆசிரியர்கள் கற்றுகொடுப்பது எப்படி என்பது  குறித்துகையேடு ஒன்றைசி.பி.எஸ்.., கல்வி நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment