Tuesday 17 September 2013

10, 12ம் வகுப்புப் பொதுத் தேர்வு வினா-விடைத்தாள்களைப் பாதுகாக்க தனி வாகனங்கள் அரசு தேர்வு துறை திட்டம்


                       10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத் தாள்களை பாதுகாக்க தேவையான நடவடிக் கையை தேர்வுத்துறை எடுத் துள்ளது. விடைத்தாள் களை தபால் துறை மூலம் அனுப்புவதற்கு பதிலாக வேறு வாகனங்களை பயன் படுத்தவும் திட்டமிட்டுள் ளது. கடந்த வருடம் எஸ்.எஸ்.
எல்.சி. தமிழ் 2-ம் தாள் விடைத்தாள் கட்டுகள் விருத் தாசலம் அருகே ரயில்வே தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன. அதுபோல கடந்த 2008-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்தில் விடைத் தாள்கள் தீவிபத்தில் சேதம் அடைந்தன.மேலும் வினாத்தாள் களில் அச்சுப்பிழை இருந் தது. இப்படி பிழை வராமல் இருக்கவும், வினாத்தாள், விடைத்தாள்கள் பாதுகாப் பாக இருக்கவும் தேர்வுத் துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று தேர்வுத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டதற்கு அவர் கூறிய தாவது:எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 தேர்வுக்கு வினாத் தாள்களை தேர்வு மையங் களுக்கு வினியோகிக்கவும், மாணவர்களின் விடைத் தாள்களை தேர்வு மையங் களில் இருந்து சேகரித்து மதிப்பீடு செய்யும் மையங் களுக்கு கொண்டு செல்ல வும் தபால்துறை வாகனங் கள் பயன்படுத்தப்படுகின் றன.

                 இதற்கு ரூ.4 கோடி வரை செலவாகிறது. ஆனால் அந்த அளவுக்கு பாதுகாப்பாக கொண்டு செல்லப்படவில்லை. எனவே தபால் வாகனங்களை வாட கைக்கு அமர்த்தாமல் வேறு வாகனங்களை அமர்த்த லாம் என்று திட்டமிட்டு உயர் அதிகாரிகளின் முடிவுக் காக அனுப்பி உள்ளோம். மேலும் வினாத்தாள் வெளிமாநிலங்களில் தான் அச்சடிக்கப்படுகின்றன. அச்சடிக்குமுன் 4 முறை சரி யாக பிழை பார்த்து திருத் தப்படும். தமிழ்நாட்டில் பிழை பார்க்க முடியாது. அப்படி பார்த்தால் கேள்வித் தாள் வெளியாகி விடும்.இந்த வருடம் எஸ்.எஸ். எல்.சி., பிளஸ்-2 தேர்வை சிறப்பாக நடத்தி முடிக்க திட்டமிட்டுள்ளோம். வினாத் தாள் மற்றும் விடைத்தாள் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப் படும்.இவ்வாறு அவர் தெரி வித்தார்.

No comments:

Post a Comment