Monday, 2 September 2013

உத்தர பிரதேசத்தில், 13 வயது சிறுமி, இளநிலை அறிவியல் பட்டம் பெற்று, முதுநிலை அறிவியல் படிப்பில் சேர, லக்னோ பல்கலைக்கழகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.


                      லக்னோ நகரைச் சேர்ந்தகூலித் தொழிலாளி பகதூர் வர்மா. இவருக்குஒரு மகனும்2 மகள்களும் உள்ளனர். பகதூரின்கடைசி மகள் சுஷ்மா13சிறு வயதிலேயேஅறிவுக் கூர்மையுடன் காணப்பட்டார். 2000ம்
ஆண்டில் பிறந்த சுஷ்மாதன் இரண்டரை வயதில்லக்னோவில் நடைபெற்றராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றார். சிறு வயதில்கடினமான ராமாயணத்தை மனப்பாடம் செய்து ஒப்பித்த சுஷ்மாதன் 5 வது வயதில்10ம் வகுப்பு பாடங்கள் அனைத்தையும் மனப்பாடம் செய்தார். எனினும்5 வயதில்,நேரடியாக10ம் வகுப்பில் சேர அனுமதி கிடைக்காததால்2005-06 ல்,9 ம் வகுப்பில் சேர்ந்தார். 2006-07ல்10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றுநாட்டிலேயேமிகக் குறைந்த வயதில்10ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவி என்ற பெருமையை பெற்றார்.

                      அதன் பின்2009-10 ம் ஆண்டுபிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று,தன்10வது வயதில்லக்னோ பல்கலை அனுமதியுடன்பி.எஸ்சி.,விலங்கியல் மற்றும் உயிரியல் பாடத்தை தேர்ந்தெடுத்து படித்தார். இந்த ஆண்டுஜூனில் வெளியானபி.எஸ்சி.பட்டத் தேர்வு முடிவுகளில்66 சதவீத மதிப்பெண்களைப் பெற்று பட்டப் படிப்பை நிறைவு செய்தார். இதன் பின்லக்னோ பல்கலையில்எம்.எஸ்சி.,மைக்ரோ பயாலஜி படிப்பில் சேர விண்ணப்பித்தார். இதிலும் தேர்வு செய்யப்பட்டு உள்ளார். இதன் மூலம்நாட்டிலேயே13 வயதில் முதுநிலை அறிவியல் பட்டம் படிக்கும் முதல் மாணவி என்ற பெருமையை சுஷ்மா பெற்றுள்ளார். பல்கலையில் இடம் கிடைத்தும்குடும்பச் சூழல் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலையில்,சுஷ்மா தவிக்கிறார். இந்த தகவல் அறிந்த பலரும்சுஷ்மாவுக்கு உதவ முன்வந்துள்ளனர். பிரபல பாடலாசிரியர்ஜாவித் அக்தர்சுஷ்மாவின் கல்விக் கட்டணம் குறித்த விவரங்களை அனுப்பும்படிபல்கலை நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். சுஷ்மாவின் படிப்பு செலவு முழுவதையும் ஏற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment