Tuesday 25 June 2013

மாற்றாந்தாய் போக்குடன் புறக்கணிக்கப்படும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்கள்.

1. பள்ளிக் கல்வித் துறையில் பணியில் சேரும் பட்டதாரி ஆசிரியர்கள்பணிமூப்பு மற்றும் உயர்கல்வித் தகுதியின் அடிப்படையில் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் / முதுகலை பட்டதாரி ஆசிரியர் / வட்டாரவளமைய 
மேற்பார்வையாளர்மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் /மாவட்ட கல்வி அலுவலர் / மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்,முதன்மைக் கல்வி அலுவலர் / இனை இயக்குனர்இயக்குனர் போன்றபல உயர் பதவிகளுக்கு பதவி உயர்வு பெற வழி வகைசெய்யப்பட்டுள்ளதுஆனால்அதே கல்வித் தகுதியுடன் ஒரே தேர்வுமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடக்கக் கல்வித் துறையில் பணியில்சேரும் பட்டதாரி ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பானது நடுநிலைப்பள்ளித் தலைமையாசிரியர் மற்றும் அதனையொத்த பணியிடமானஉதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியுடன்கட்டுப்படுத்தப்படுகிறதுமேலும்பட்டதாரி ஆசிரியர் தகுதியுடன்நேரடியாக உதவித் தொடக்கக் கல்வி அலுவலராக பணியில்சேருபவர்களுக்கு அவர்கள் பணிக்காலம் முழுவதும் பதவி உயர்வுவாய்ப்பு என்பது இல்லவே இல்லை.
2. தற்பொழுது சுமார் 125to150 மாணவர்கள் இருந்தாலே உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் நிலையில் அந்த ஒரு பள்ளியைமட்டும் நிர்வகிக்கும் பொறுப்பில் உள்ள உயர்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் பதவி நிலையவிடசுமார் 75 - 100 தொடக்க,நடுநிலைப் பள்ளிகளின் கண்காணிப்புஆய்வு மற்றும் சம்மந்தப்பட்டஆசிரியர்களின் நிர்வாகப்பொருப்பை வகிக்கும் உதவி தொடக்கக் கல்விஅலுவலர்களின் பதவி நிலை கீழே வைக்கப்பட்டுள்ளது.
3. தொடக்கநடுநிலைப் பள்ளிகள் மற்றும் உயர்நிலைப் பள்ளி/மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 6to8 வகுப்புகளுக்காக இயங்கிக்கொண்டிருக்கும் வட்டார வள மையங்களின் மேற்பார்வையாளர்பதவிக்கு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைக்கொண்டே நிரப்பப்படுகிறதுதொடக்கநடுநிலைப் பள்ளிகளின்எண்ணிக்கை பெரும்பான்மையாக உள்ள நிலையில்,மேற்பார்வையாளர் பதவிக்கு தொடக்கக் கல்வித் துறையில்பணியாற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் / பட்டதாரிஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வாய்ப்பளிக்கப் படாதது ஏன் ?.
4. மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் பதவியானது தொடக்கக்கல்வித் துறைக்கு தொடர்பில்லாத உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள தலைமையாசிரியர்களுக்கே அளிக்கப்படுகிறது.இப்பணி விதிகள் அனைத்தும் பள்ளிக்கல்வித்துறை ஒன்றாகஇருந்தபொழுது வகுக்கப்பட்டது போல தோன்றுகிறதுதற்பொழுதுதொடக்கக் கல்விக்கென தனி இயக்ககம் உள்ள நிலையில்தொடக்கக்கல்வித்துறையிலும் பள்ளிக்கல்விதுறைப்போன்று தகுதிவாய்ந்தபட்டதாரி ஆசிரியர்கள் / தமிழாசிரியர்கள் / நடுநிலைப்பள்ளிதலைமையாசிரியர் / உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் என பலர்உள்ளனர்இந்த நிலையில்மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்பதவியினை தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரிபவர்களுக்கேஒதுக்கீடு செய்துமேற்பத்தி 2ன்படி உயர்நிலைப் பள்ளிதலைமையாசிரியர் நிலைக்கு உயர்த்தப்பட்ட உதவித் தொடக்கக் கல்விஅலுவலர்கள் மற்றும் மேற்பத்தி 3ன்படி தொடக்கக் கல்வித்துறையிலிருந்து பதவியுயர்வுப் பெற்ற வட்டார வளமையமேற்பார்வையாளர்களைக் கொண்டும் ஏன் நிரப்பக்கூடாது?.
5. பள்ளிக் கல்வித்துறையில் இடைநிலை உதவி ஆசிரியர்களாகபணியில் சேருபவர்கள் B.Lit.,B.Ed. உயர்கல்வி தகுதி பெற்றதும்பணிமூப்பின் படி தமிழாசிரியர்களாகவும் பின்னர் உயர்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்களாகவும் பதவி உயர்வு பெறுகின்றனர்இவர்களதுமொத்தப்பணிக் காலத்தில் B.Lit., B.Ed. M.A.,  உயர்கல்வி தகுதிகளுக்குஇரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (4 ஊதிய உயர்வுகள்)பெற்றுவிடுகின்றனர்ஆனால்தொடக்கக் கல்வித் துறையில்இடைநிலை உதவி ஆசிரியர்களாக பணியில் சேர்ந்து தமிழாசிரியர்தகுதியின் அடிப்படையில் பதவி உயர்வு பெற்ற நடுநிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் B.Ed. தேர்ச்சிப் பெற்றால் ஊக்க ஊதியம்மறுக்கப்படுகிறதுஇவர்களைவிட உயர் பதவியிலுள்ளஉயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் B.Lit., B.Ed. & M.A., தேர்ச்சிக்கு 2 ஊக்க ஊதிய உயர்வுகளையும் பெற்றுவிடுகின்ற நிலையில் – கீழ் பதவிநிலையிலுள்ள நடு  நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் இரண்டாவதுஊக்க ஊதியம் பெறுவதற்கு M.Ed. தகுதி பெற வேண்டியுள்ளதுஇது எந்தவகையில் நியாயம் ?. இவை அனைத்திற்கும் காரணமாகதொடக்கக்கல்வித் துறையில் மாவட்டம் மற்றும் மாநில அளவில் நிர்வாகப்பொருப்பில் உள்ள உயரதிகாரிகள் அனைவரும் பள்ளிக்கல்வித்துறையை சார்ந்தவர்களாக இருப்பதால் அவர்களின்பாரபட்சமான நடவடிக்கை எனவும்இந்திய அரசியல் அமைப்புச் சட்டம்14 மற்றும் 16 ன்படி சம உரிமை மற்றும் வாய்ப்புகள் பறிக்கப்படுவதாககருதப்படுகிறதுஇக்குறைகளை களைய தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்குமா?....

THANKS TO-MR. Selvam R - dharmapuri

No comments:

Post a Comment