Tuesday 25 June 2013

பி.இ. இரண்டாமாண்டு நேரடி சேர்க்கை: கலந்தாய்வு நாளை தொடக்கம்


                             பி.. இரண்டாமாண்டு நேரடி மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு காரைக்குடியில் உள்ள அழகப்ப செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் டிப்ளமோ
மாணவர்கள் பதிவிறக்கம் (ஈர்ஜ்ய்ப்ர்ஹக்) செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலைச் சமர்ப்பித்தாலே போதுமானது என்று தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்த் கூறினார். டிப்ளமோ முடித்த மாணவர்கள், பி.எஸ்சி. முடித்த மாணவர்கள் இந்தக் கலந்தாய்வில் பங்கேற்று நேரடியாக பி.. இரண்டாம் ஆண்டில் சேரலாம். கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில், டிப்ளமோ முடித்த மாணவர்களுக்கு இதுவரை மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனால், கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்த மாணவர்கள் பதற்றமடைந்தனர்.

                         இதுதொடர்பாக, தொழில்நுட்பக் கல்வி ஆணையர் குமார் ஜெயந்திடம் கேட்டபோது அவர் கூறியது: பி.. நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக் குழுவிடம் டிப்ளமோ தேர்வு முடிவுகள் சி.டி.க்களில் வழங்கப்பட்டுவிட்டன. எனவே, மாணவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலுடன் கலந்தாய்வில் பங்கேற்கலாம். அவர்களுக்கு எந்தப் பிரச்னையும் வராது என்றார் அவர். காரைக்குடியில் உள்ள அழகப்பா செட்டியார் பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் ஜூன் 26 முதல் ஜூலை 17 வரை பி.. நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.

No comments:

Post a Comment