Saturday 14 September 2013

"அங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் படிப்பவர்கள் பொது தேர்வை எழுத முடியாது"


                  "அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளின் மாணவமாணவியர்பொதுத்தேர்வை எழுத முடியாது என,தேர்வுத்துறை இயக்குனர்திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். எனவேஅங்கீகாரம் இல்லாத பள்ளிகள்
பிரச்னை குறித்துதமிழக அரசுவிரைந்து முடிவெடுத்துஅங்கீகாரம் வழங்க வேண்டும்" என தமிழ்நாடு நர்சரிபிரைமரிமெட்ரிகுலேஷன் பள்ளிகள் சங்க பொதுச் செயலர் நந்தகுமார் வலியுறுத்தி உள்ளார். அவர்மேலும் கூறியதாவது: நர்சரிபிரைமரி பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எனஇரண்டும் சேர்த்து4,000 பள்ளிகள் வரைஅங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருகின்றன. இடப் பிரச்னையை காரணம் காட்டிமெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு,தொடர் அங்கீகாரம் வழங்கஅனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
                         இரு ஆண்டுகளாகவேஅங்கீகாரம் இல்லாமல்இயங்கி வரும் நிலை உள்ளது. இந்த பிரச்னையை தீர்ப்பதற்காகபள்ளிக் கல்வி முன்னாள் இயக்குனர்தேவராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட நிபுணர் குழுபொது மக்களிடம் விசாரணை நடத்தியது. இதன் அறிக்கைஇன்னும்தமிழக அரசிடம்சமர்ப்பிக்கப்படவில்லை. இதற்கிடையே, "அங்கீகாரம் இல்லாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளில்பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவ,மாணவியர்வரும் பொதுத்தேர்வை எழுத அனுமதிக்க முடியாது" என தேர்வுத்துறை இயக்குனர்தேவராஜன் கூறியுள்ளார். இதனால்,அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீதான பிரச்னையில்தமிழக அரசுவிரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
               பிரச்னைக்குரிய பள்ளிகள் அனைத்தும்பல ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டவை என்பதால்புதிய விதிமுறைகளில் இருந்து விலக்கு அளித்துஅங்கீகாரம் வழங்கஅரசு முன்வர வேண்டும். இதை வலியுறுத்திவரும்30ம் தேதி2,000த்திற்கும் மேற்பட்ட பள்ளிகளின் நிர்வாகிகள்தலைமைச் செயலகத்தில்முதல்வர் தனிப்பிரிவு அலுவலகத்தில்கோரிக்கை மனு கொடுக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறுநந்தகுமார் கூறினார். மெட்ரிக் பள்ளி இயக்குனரக வட்டாரங்கள் கூறுகையில், "அறிக்கை தயாராகி விட்டது. எனினும்அடுத்த வாரத்தில்மீண்டும் ஒருமுறை கூடிஅறிக்கையை இறுதி செய்ய உள்ளோம். இம்மாத இறுதிக்குள்தமிழக அரசிடம்அறிக்கையை சமர்ப்பித்து விடுவோம்" என தெரிவித்தன.

                           இந்த விவகாரத்தில்10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ,மாணவியரின் எதிர்காலம் சம்பந்தபட்டிருப்பதால்பள்ளிகளில்,பதற்றம் ஏற்பட்டுள்ளது. பெற்றோர்பெரும் மன உளைச்சலில் உள்ளனர். எனவேஇந்த பிரச்னையை தீர்ப்பதில்தமிழக அரசு முன்னுரிமை தர வேண்டும் என்பதுபெற்றோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

No comments:

Post a Comment