Saturday 8 June 2013

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்பங்கள் தயார்: அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகளிலும் 17–ந்தேதி முதல் கிடைக்கும்

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 12 லட்சம் விண்ணப்ப படிவங்கள் அச்சடிக்கப்பட்டுவிற்பனை மையங்களுக்கு நாளை (திங்கட்கிழமைமுதல் அனுப்பிவைக்கப்படுகின்றனவிண்ணப்பங்கள் அனைத்து அரசுமேல்நிலைப்பள்ளிகளிலும் 
17–ந்தேதி  முதல்  விற்பனைக்கு கிடைக்கும்.
ஆசிரியர் தகுதித்தேர்வு
மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி ஒன்றாம்வகுப்பு முதல் 8–ம் வகுப்பு ரையுள்ள  ஆசிரியர்களுக்கு  தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு  இருக்கிறதுஅதன்படி, 23.8.2010 முதல் இடைநிலை,பட்டதாரி  ஆசிரியர்  நியமனங்களுக்கு தமிழக அரசுதகுதித்தேர்வைகட்டாயமாக்கி உள்ளது.கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித்தேர்வில்6½ லட்சம் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர்மொத்தம் 150 மதிப்பெண் கொண்டதகுதித்தேர்வில் 60 சதவீதம் மதிப்பெண் அதாவது 90 மார்க் எடுத்தால் தேர்ச்சிபெற்றவர் ஆவார்கள்தகுதித்தேர்வு தேர்ச்சி 7 ஆண்டுகள் செல்லத்தக்கதுஆகும்.
12 லட்சம் விண்ணப்பங்கள்
இந்த ஆண்டு தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம்அண்மையில் வெளியிட்டதுஅதன்படிஇடைநிலை ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு ஆகஸ்டு மாதம் 17–ந்தேதியும்பட்டதாரி ஆசிரியர்களுக்கானதகுதித்தேர்வு 18–ந்தேதியும் நடத்தப்படுகிறதுதகுதித்தேர்வை இந்த முறை 7லட்சம் ஆசிரியர்கள் எழுதுவார்கள் என்று தேர்வு வாரியம்எதிர்பார்க்கிறது.இதை கருத்தில் கொண்டு 12 லட்சம் விண்ணப்பங்கள்அச்சடிக்கப்பட்டு தயார்நிலையில் உள்ளனவிண்ணப்பங்களை தமிழகத்தில்உள்ள அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளிகளிலும் விற்பனை செய்ய ஏற்பாடுசெய்யப்பட்டு உள்ளதுவிண்ணப்பங்கள் விற்பனை மையங்களுக்கு நாளை(திங்கட்கிழமைமுதல் அனுப்பி வைக்கப்படுகின்றன.
எப்போது கிடைக்கும்?
தகுதித்தேர்வு விண்ணப்ப படிவங்கள் 17–ந்தேதி முதல் ஜூலை 1–ந்தேதிவரை விற்பனைக்கு கிடைக்கும்விண்ணப்ப கட்டணம் ரூ.50.தேர்வுகட்டணம் ரூ.500. ஆதி திராவிடர்பழங்குடியினர் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.250 மட்டும்பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஜூலை1–ந்தேதிக்குள்  சம்பந்தப்பட்ட  மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில்(டி..ஆபீஸ்சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம்அறிவித்துள்ளது.தற்போதைய தகுதித்தேர்வு மூலமாக ஏறத்தாழ 13 ஆசிரியர்பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 2 ஆயிரம்  இடைநிலை ஆசிரியர்பணி இடங்களையும் நிரப்ப திட்டமிடப்பட்டு உள்ளதுஇந்த ஆண்டுநடுநிலைப்பள்ளிகளாகவும்உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டபள்ளிகளில் ஏற்படும் காலி இடங்களுக்கு தேர்வுக்கு முன்பாக அரசு ஒப்புதல்கிடைக்கும் பட்சத்தில் அந்த காலி இடங்களும் சேர்த்து நிரப்பப்படும் என்றுஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தேர்வு முறை

இடைநிலை ஆசிரியர் நியமனத்தை பொறுத்தவரையில்தகுதித்தேர்வில்தேர்ச்சி பெற்றவர்களில் மாநில பதிவுமூப்பு (சீனியாரிட்டிஅடிப்படையில்தேர்வுசெய்யப்படுவார்கள்பட்டதாரி ஆசிரியர்கள்தகுதித்தேர்வு மதிப்பெண் மற்றும் பிளஸ்–2, பட்டப்படிப்புபி.எட்மதிப்பெண் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.அவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் 60–க்குமாற்றப்படும்பிளஸ்–2 மதிப்பெண் தகுதிக்கு அதிகபட்சம் 10 மார்க்கும்,இளங்கலை பட்டப்படிப்புக்கு 15 மார்க்கும்பி.எட்படிப்புக்கு 15மதிப்பெண்ணும் ஆக மொத்தம் 40 மார்க் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இரண்டையும் சேர்த்து 100–க்கு ‘கட் ஆப் மார்க்’  எவ்வளவுஎன்பது கணக்கிடப்பட்டு அதன் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள்நியமிக்கப்படுவார்கள்.

No comments:

Post a Comment