Friday 14 June 2013

அனைத்து ஆசிரியர் சங்கங்களையும் வருகிற 19 மற்றும் 20ம் தேதி அழைத்து பேச தமிழக அரசு முடிவு


            தமிழகத்திலுள்ள அனைத்து தொடக்கக்கல்வித்துறையை சார்ந்த ஆசிரியர் சங்கங்களுடன் வருகிற 19ம் தேதியும், பள்ளிக்கல்வி த்துறையை சார்ந்த அனைத்து உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி
சங்கங்களுடன் 20ம் தேதியும் கோரிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வி அமைச்சர், தலைமை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் திரு. செ.முத்துசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். இதையடுத்து ஆசிரியர்களின் முக்கிய கோரிக்கைகள் குறித்து விரைவில் முடிவெட்டப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment