Friday 7 June 2013

அங்கீகாரம் இன்றி செயல்பட்டு வந்த 44 பள்ளிகள் மூட உத்தரவு

           அரசின் உரிய அங்கீகாரம் இல்லாமல் செயல்பட்டு வந்த 44 தனியார் பள்ளிகளை மூட கடலுர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில், அரசின் அங்கீகாரம் பெறாமலும், கல்வித் துறையின் எந்த தொடர்பும்
இல்லாமலும் பல பள்ளிகள் இயங்குவதாக புகார்கள் வந்ததை அடுத்து, மாவட்ட நிர்வாகம் அதிரடி ஆய்வு நடத்தி, கடலூரில், சிதம்பரம், திட்டக்கடி உள்ளிட்ட ஊர்களில் 44 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி இயங்கி வந்ததை கண்டு பிடித்தது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அவர்களிடம் இருந்து பதில் வராத நிலையில், அனைத்துப் பள்ளிகளையும் மூடும்படி, மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment