Friday 14 June 2013

பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை வெளியிட உயர் நீதிமன்றம் உத்தரவு



           அனைத்து பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை ஜூன் 21-ஆம் தேதி, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2011-12-ஆம் ஆண்டிற்கான
மாணவர்களின் தேர்ச்சி விகிதங்களையும், கல்லூரியின் தகுதியை மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், அதன் விவரங்களை வெளியிடக் கோரி, பூபாலசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், பொறியியல் கல்லூரிகளின் தகுதிப் பட்டியலை, ஜூன் 21-ஆம் தேதி, இணையதளத்தில் கல்லூரி விவரங்களை வெளியிட வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இதன் அடுத்த கட்ட விசாரணையை 2 வாரத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

No comments:

Post a Comment