Monday 10 June 2013

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் எவை? பட்டியல் வெளியாவதில் தாமதம், அட்மிஷனுக்கு மாணவர்கள் தவிப்பு

தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் 150 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் எனஅறிவிக்கப்பட்டதுஆனால்இந்தப் பள்ளிகள் பட்டியல் இன்னும்வெளியிடப்படவில்லைஎனவே மேல் கல்விக்கு தயாராக உள்ளமாணவர்கள் எங்கு சேர்வது 
என்பதில் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கு 100 உயர்நிலைப்பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் 50 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும் என தமிழக முதல்வர்சட்டசபையில் அறிவித்தார்ஆனால் இதுவரை தரம் உயரும் பள்ளிகளின்பெயர்கள் பட்டியல் வெளியிடப்படவில்லைஆனால் 2 மாதத்துக்கு முன்பேதங்கள் மாவட்டத்தில் தரம் உயர்த்த தகுதி உள்ள பட்டியல்கள் விபரங்களைமாவட்ட கல்வித்துறை மாநில கல்வித்துறைக்கு அனுப்பினர்.மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த தகுதியான பள்ளிகள் என 260பள்ளிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு சென்றுள்ளதாக கூறப்படுகிறதுஇதில்இருந்து 100 பள்ளிகளை தேர்வு செய்து அறிவிக்க வேண்டும்இது போல் மேல்நிலைப்பள்ளிகளாக மாற்றப்பட உள்ள நடுநிலைப்பள்ளிகள் பட்டிய லும்பரிசீலனைக்காக முன்னரே அனுப்பப்பட்டனவரும் 20ம் தேதி எஸ்எஸ்எல்சிமதிப்பெண் பட்டியல் வழங்கப்பட உள்ளதுமேலும் 9ம் வகுப்பு மற்றும் 11ம்வகுப்பிற்கு மாணவர்கள் சேர்க்கை தனியார் பள்ளிகளில் மும்முரமாகநடைபெறுகிறதுஏற்கனவே இந்த ஆண்டு 10ம் வகுப்பில் இதுவரை இல்லாதஅளவு தேர்ச்சி சதவீதம் அதிகரித்துள்ளதால் 11ம் வகுப்பிற்கு சேர அனைத்துபள்ளிகளிலும் கடும் போட்டி நிலவுகிறதுஇந்த நிலையில் 10ம் வகுப்பு வரைஉள்ள அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் பிளஸ் 1ல் சேர்வதற்கு எங்குசெல்வது என்று அலையும் நிலை ஏற்பட்டுள்ளதுமேல்நிலைப்பள்ளிகளாகதரம் உயர்த்தப்பட்டுள்ள பள்ளிகளின் விபரங்களை உடனடியாகவெளியிட்டால் அப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்ந்து பயில இடம் கிடைக்கும்என்ற நம்பிக்கை அவர்களுக்கு ஏற்படும் என பெற்றோர் கருதுகின்றனர்.எனவே சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி தரம்உயர்த்தப்பட்ட பள்ளிகள் விபரங்களை காலம் தாழ்த்தாமல் உடனடியாகபள்ளிக் கல்வித்துறை வெளியிட வேண்டும் என மாண வர்களும்பெற்றோரும் எதிர்பார்க்கின்றனர்

No comments:

Post a Comment