Saturday 1 June 2013

அண்ணாமலைப் பல்கலைக்கழக தகவல் 28 மையங்கள் மூடப்பட்டன

 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அண்ணாமலைப்பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கத்தின் 28 தகவல்மையங்களை மூட பதிவாளர் (பொறுப்புஎன்.பஞ்சநதம் உத்திரவிட்டுள்ளார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  நிதிநெருக்கடி 
மற்றும்நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர்ஊழியர்கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தினர்.பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு போராட்டம்  விளைவாகதமிழகஅரசு 2  குழுக்களை  அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கைசமர்பித்ததுஇந்நிலையில் பல்கலைக்கழக நிர்வாகியாகஷிவ்தாஸ்மீனாவை கடந்த ஏப்.4-ம் தேதி தமிழக   அரசு நியமனம்  செய்து, அவர் உடனடியாக பொறுப்பேற்றார். பின்னர் தமிழக அரசு  உயர்கல்வித்துறை மூலம் தமிழகசட்டப்பேரவையில் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை அரசுகட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளதுஇதனையடுத்து பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால்நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவால் பல்வேறு சீரமைப்புபணிகள் நடைபெற்று வருகிறது.இந்தியா முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைக்கழ தொலைதூரக்கல்வி இயக்ககத்தின் 89 படிப்பு மையங்கள்உள்ளதுதமிழகத்தில் மட்டும் 60 படிப்பு மையங்கள் உள்ளனமேலும்தமிழகத்தில் 117 தகவல் மையங்களும் உள்ளனநிதிநெருக்கடியைகருத்தில் கொண்டு தமிழகத்தில் தேவையில்லாமல் உள்ள தகவல்மையங்களான அரவக்குறிச்சிவரட்டாண்டுசேத்தூர்பேட்காங்கேயம்,தேன்கனிக்கோட்டைகிருஷ்ணாபுரம்தேவக்கோட்டை உள்ளிட்ட 28தகவல் மையங்களை மூட பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாஉத்தரவின் பேரில் பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்புஎன்.பஞ்சநதம்உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment