Saturday 8 June 2013

பள்ளிக்கு செல்லாதோர் எண்ணிக்கை 58 ஆயிரமாக உயர்வு: ஆய்வில் தகவல்

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட ஆய்வில்தமிழகத்தில்பள்ளிசெல்லாதோர் எண்ணிக்கை, 52 ஆயிரத்தில் இருந்து, 58 ஆயிரமாக  உயர்ந்துள்ளது.அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ்
ஒவ்வொரு ஆண்டும்,பள்ளி செல்லாத குழந்தைகள் குறித்துகணக்கெடுப்பு நடத்தப்படுகிறதுசென்னை,கோவைகடலூர்தர்மபுரி உள்ளிட்ட, 30 மாவட்டங்களில், 6 வயது முதல், 14 வரைஉள்ளோர் குறித்துகணக்கெடுப்பு நடத்தப்படுகிறதுஇக்கணக்கெடுப்பின்பின்படி, 2008-09ல்பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை, 11,592 ஆக இருந்தது. 2010-11ல், 52,692ஆகவும், 2011-12ல், 58,520 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு  கணக்கெடுப்பின்படி,பள்ளி செல்லாதோர் எண்ணிக்கையில்விழுப்புரம் மாவட்டம் முதலிடத்தில் உள்ளது.வறுமைவேலை தேடி இடம் பெயர்தல் ஆகிய காரணங்களால்பள்ளி செல்லாதோர்எண்ணிக்கைஅதிகரித்து வருவதாக கூறப்படுகிறதுகோவைதிண்டுக்கல்மாவட்டங்களில்சுமங்கலி திட்டத்தின் கீழ், 13 வயதுள்ளோர்நூற்பாலைகளில்பணியமர்த்தப்படுகின்றனர்இவர்களுக்கு மூன்றாண்டு சம்பளமாக, 30 ஆயிரம்ரூபாயிலிருந்து, 40 ஆயிரம் ரூபாய் வரை வழங்கப்படுகிறதுஇத்தொகையை நம்பி,பல பெற்றோர்தங்களுடைய பெண் குழந்தைகளைஇத்திட்டத்தில் வேலைக்குசேர்க்கின்றனர்திருப்பூர் மாவட்டத்தில்ஜவுளிசாயப்பட்டறை தொழிற்சாலைகளில்,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எளிதில் வேலைவாய்ப்பை பெறுகின்றனர்.இதில் நல்ல வருமானமும் பெறுகின்றனர்சிறு வயதிலேயே குழந்தைகள் அதிகசம்பளம் ஈட்டுவதால்பெற்றோர்அவர்களை வேலைக்கு அனுப்பவேவிரும்புகின்றனர்திருநெல்வேலியில்ஜவுளிபீடி தயாரிப்பு தொழிலில்அதிகளவில்குழந்தைகளை பயன்படுத்துகின்றனர்இதனால்தென்மாவட்டங்களில் பள்ளிசெல்லாதோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது.

பள்ளி செல்லாதோர் எண்ணிக்கை குறைக்க வேண்டுமென்றால்அரசு பள்ளிகளின்தரத்தை உயர்த்த வேண்டும்அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்குஅதிக முக்கியத்துவம்கொடுக்கப்பட வேண்டும்இலவச கல்வி திட்டத்தைமுறையாக நடைமுறைப்படுத்தவேண்டும்குழந்தை தொழிலாளர் சட்டம்முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணிக்க வேண்டும் எனகல்வியாளர்கள் கருத்துதெரிவித்துள்ளனர்.அருணோதயா தொண்டு நிறுவன நிர்வாக இயக்குனர் வெர்ஜில் கூறியதாவதுஅதிகமாணவர்கள்பள்ளி படிப்பில் சேர்கின்றனர்ஆனால்பொருளாதார வசதியின்மைகாரணமாகமேற்படிப்பை தொடருவதில் தான் சிக்கல் நிலவுகிறதுநான்காம் வகுப்புமற்றும் ஐந்தாம் வகுப்பில்பள்ளி படிப்பை கைவிடுவோர் எண்ணிக்கை மிகவும்அதிகம்அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறைகட்டமைப்பு வசதிகள் இன்மைஉள்ளிட்ட காரணங்களால்தனியார் பள்ளிகள் அசுர வளர்ச்சி பெற்று வருகின்றன.எனினும்ஏழைஎளிய குழந்தைகளால்தனியார் பள்ளியிலும் படிக்க முடிவதில்லை.இதனால்கல்வியை கைவிடுவோர் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதுஇவ்வாறு,வெர்ஜில் கூறினார்.

No comments:

Post a Comment