Friday 7 June 2013

எஸ்சி, எஸ்டியினருக்கு உதவித் தொகையோடு இலவச பயிற்சி

எஸ்சி., எஸ்டி., மாணவர்களுக்கு ஆங்கில அறிவுடைப்பிங்சுருக்கெழுத்து,கணினி என பலவிதமான பயிற்சி வகுப்புகள் இலவசமாகக் கற்பிக்கப்படஉள்ளது. எஸ்சி., எஸ்டியினருக்கான பயிற்சி மற்றும் வழிகாட்டி மையத்தின் 
மூலம்இந்த 11 மாத இலவச மற்றும் உதவித் தொகையுடன் கூடிய பயிற்சிவகுப்புக்கு ஜூன் மாதம் 27ம் தேதி முதல் ஜூலை மாதம் 12ம் தேதி வரைவிண்ணப்பங்களை இலவசமாகப் பெற்று ஜூலை 12ம் தேதிக்குள்விண்ணப்பிக்க வேண்டும்.சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய கட்டடத்தின் 3வது மாடியில் இயங்கும் பயிற்சி மற்றும் வழிகாட்டிமையத்தில் விண்ணப்பங்களை இலவசமாகப் பெற்று பூர்த்தி செய்து,அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகலை உடன் சேர்த்து அதேமுகவரியில் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பிளஸ் 2 மற்றும் அதற்கு மேல் படித்த எஸ்சி., அல்லது எஸ்டி மாணவர்கள் 18வயதுக்கு மேல் 30 வயதுக்குள் இருப்பவர்கள் இந்த பயிற்சியில் சேரவிண்ணப்பிக்கலாம்வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்கவேண்டியதும் அவசியமாகிறது

No comments:

Post a Comment