Friday 14 June 2013

என்ஜினீயரிங் கவுன்சிலிங்கிற்காக சென்னை வரும் மாணவர்களுக்கு பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை தமிழக அரசு அறிவிப்பு



            தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:– 2013–2014–ம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு பொறியியற் மாணவர் சேர்க்கைக்கு அண்ணா பல்கலைக்கழக
கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கு வெளியூரிலிருந்து (சென்னை மாவட்டம் நீங்கலாக) சென்னைக்கு வரும் மாணவர் மற்றும் அவருடன் உதவிக்காக வரும் ஒரு நபருக்கு (1+1) அரசு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் 50 சதவீதம் இருவழி பயண கட்டண சலுகை வழங்கப்படும். இந்த சலுகையை பெறுவதற்கு, சென்னை, அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்விற்கு அழைக்கப்பட்டு வெளியூர் மாணவ, மாணவிகள் அழைப்புக்கடிதத்தின் நகலை சம்பந்தப்பட்ட அரசு போக்குவரத்து கழகங்களின் அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும். நகலை பெற்றுக்கொண்ட அலுவலர்கள் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டது என்பதை அழைப்பு கடிதத்தின் முன்பக்கத்தில் சான்றளித்த பின்பு தக்க பயண சீட்டுகளை 1+1 மாணவர்களுக்கு வழங்குவர். இதே நடைமுறை கலந்தாய்வினை முடித்து ஊருக்கு திரும்ப செல்வதற்கும் பொருந்தும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment