Tuesday 26 February 2013

பிளஸ் 2 பொதுத் தேர்வு: இறுதிக் கட்ட பணிகளில் அதிகாரிகள் தீவிரம்



                பிளஸ் 2 பொதுத்தேர்வு குறித்த நடவடிக்கைகளில், கல்வித்துறை அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். மார்ச் 1ம் தேதி முதல் 27ம் தேதி வரை, பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடக்கிறது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ளதால், தேர்வுக்கான ஏற்பாடுகளில் கல்வித்துறை அதிகாரிகள்
மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தேர்வு நடக்கும் மையங்கள், தேர்வு அறைகளின் எண்ணிக்கை, மாணவர்களின் எண்ணிக்கை, கழிப்பிடங்கள் மற்றும் குடிநீர் வசதி குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். பள்ளிகளில் அனைத்து இடங்களிலும் துண்டு காகிதங்கள் எதுவுமின்றி, சுத்தப்படுத்தவும், பயன்பாடு இல்லாத வகுப்பறைகளை பூட்டி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிக்குள் அன்னிய நபர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது; ஒவ்வொரு மையத்திலும் துப்பாக்கி ஏந்திய போலீசார், பாதுகாப்பில் ஈடுபட உள்ளனர்.
                                   
தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் கூடுதல் கண்காணிப்பாளர்களுக்கு, அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அப்போது, தேர்வு பணி நியமன உத்தரவு தரப்படும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான எழுது உபகரணங்களும் வழங்கப்பட்டு வருகின்றன
.

No comments:

Post a Comment