Wednesday 13 February 2013

பிளஸ் 2 செய்முறை தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு


                        பிளஸ் 2 செய்முறைத் தேர்வு பாதிக்காத வகையில், தேர்வு மையங்களில் மின்தடைக்கு விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு எழுத்து தேர்வுகள் மார்ச் 1ல் துவங்குகிறது. முன்னதாக, அறிவியல், கணக்கு பதிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கான செய்முறை
தேர்வு பிப்.,1 ல் துவங்கியது. தற்போது நடக்கும் செய்முறை தேர்வில், இயற்பியல் பாடத்தில் அளவீடுகளை குறிக்கவும், கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்திற்கும் மின்சாரம் அவசியம். இதையடுத்து, செய்முறை தேர்வுகள் நடக்கும் பள்ளிகள் உள்ள பகுதியில், காலை 9.30 முதல் 12.30 மணி வரையும், மதியம் 1.30 முதல் மாலை 4.30 மணி வரையும் தடையின்றி மின்சாரம் சப்ளை செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. இதே நிலை எழுத்து தேர்வின் போதும் இருக்க வேண்டும் என்பதே மாணவர்களின் எதிர்பார்ப்பு.

No comments:

Post a Comment