தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்ட முதலீட்டுக்கு, நடப்பு நிதியாண்டில், 8.5 சதவீதம் வட்டி வழங்கப்படும் என தெரிகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பிற்கு, ஆலோசனை வழங்கும் நிதி மற்றும் முதலீட்டு கமிட்டியின் கூட்டம், நேற்று நடந்தது. இதில், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியை,
நடப்பாண்டில், 8.5 சதவீதம் உயர்த்துவதற்கான குறிப்பாணை தயாரிக்கப்பட்டு முன் வைக்கப்பட்டது. இதற்கு, கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.இதில் எடுக்கப்படும் முடிவுக்கு, வரும், 25ம் தேதி கூடும், மத்திய அறக்கட்டளை வாரிய (சி.பி.டி.,) கூட்டத்தில் இறுதி ஒப்புதல் கொடுக்கப்படும் என, தெரிகிறது. தொழிலாளர்கள் சங்க வட்டாரங்களில் கிடைத்த தகவல்படி, நடப்பாண்டில், 8.5 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, முந்தைய நிதியாண்டில், 8.25 சதவீத வட்டி வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment