Tuesday 19 February 2013

விமானப் படை பணியிடங்களுக்கு ஆள்கள் தேர்வு:



                விமானப்படையில் குரூப்-எக்ஸ் தொழில்நுட்பப் பிரிவு பணியிடங்களுக்கான ஆள்கள் தேர்வு மார்ச் 2-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை வேலூரில் நடைபெறுகிறது. இது குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு: விமானப்படை தொழில் நுட்ப பிரிவு பணிகளுக்கான ஆள்கள்
தேர்வு, ஊரீஸ் கல்லூரி, 6-, ஆபிஸர்ஸ் லைன், அண்ணா சாலை, வேலூர்-1 என்ற முகவரியில் மார்ச் 2 முதல் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 1992-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியிலிருந்து 1996-ம் ஆண்டு மார்ச் 31-ம் தேதிக்குள் பிறந்த, திருமணமாகாத ஆண்கள் இந்த தேர்வு முகாமில் பங்குபெறலாம். அரியலூர், சென்னை, கோவை, கடலூர், தருமபுரி, ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், திருப்பூர், திருச்சி, வேலூர், விழுப்புரம், அந்தமான் நிகோபர் தீவுகள், பாண்டிச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே தேர்வில் பங்குபெற முடியும்.பிளஸ்-2 தேர்வில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கில பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
                                 டிப்ளமோ படிப்பில் மெக்கானிக்கல்எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோ மொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் ஏதேனும் ஒன்றில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்களும் இந்த தேர்வு முகாமில் கலந்து கொள்ளலாம்.இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044 - 22390561., 22396565., 94452 99128 என்ற தொலைபேசி எண்களிலோ, ascafstamdataone.in , asctambaramgmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளிலோ தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment