Wednesday 20 February 2013

குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினா–விடை டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியீடு.


                துணை கலெக்டர், போலீஸ் டி.எஸ்.பி. உள்ளிட்ட பதவிகளில் 25 காலி இடங்களை நேரடியாக நிரப்புவதற்காக கடந்த 16–ந்தேதி டி.என்.பி.எஸ்.சி. குரூப்–1 முதல்நிலைத்தேர்வை நடத்தியது. புதிய பாடத்திட்டத்தின்படி நடத்தப்பட்ட இந்த தேர்வை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகள் எழுதினார்கள் ஏதேனும் போட்டித்தேர்வு நடந்தால் அதற்கான வினாவிடையை (கீ ஆன்சர்) தேர்வு எழுதியவர்கள் தெரிந்துகொள்ளும் வகையில்
டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் வெளியிடப்படுவது வழக்கம். அதன்படி, குரூப்–1 முதல்நிலைத்தேர்வுக்கான வினாவிடை இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டு உள்ளதுவிடைகளில் ஏதும் சந்தேகம் இருந்தாலோ அல்லது தவறு இருந்தாலோ அதுகுறித்து 26–ந்தேதிக்குள் தெரியப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment