Thursday 21 February 2013

பிளஸ் 2 தத்கால் தேர்வு - கூடுதல் விண்ணப்பத்தை பூர்த்திசெய்ய வேண்டும்



             பிளஸ் 2 பொதுத்தேர்வை, தனித்தேர்வாக எழுத, "தத்கால்" திட்டத்தில் விண்ணப்பித்த தேர்வர்கள், உரிய இணைப்புகளுடன், மேலும் ஒரு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, 22,23 தேதிகளில், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும் என, தேர்வுத்துறை
தெரிவித்துள்ளது. தேர்வுத்துறை அறிவிப்பு: "ஆன்-லைன்" வழியில், ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், "கன்பார்மேஷன் காப்பி" என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, உரிய இணைப்புகளுடன், தேர்வுத்துறை இயக்குனரகத்தில், நேரில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், 50 ரூபாய் ஸ்டாம்ப் ஒட்டி, சுய முகவரியிட்ட கவரினையும், சமர்ப்பிக்க வேண்டும்.
                      
விண்ணப்ப எண், 1251000001 முதல், 1251001000 வரையில் உள்ள தேர்வர்கள், நாளை நேரில் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 1001 முதல், 2099 வரையிலான தேர்வர்கள், 23ம் தேதி, விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். இப்படி, விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் மாணவ, மாணவியருக்கு மட்டுமே, "ஹால் டிக்கெட்" வழங்கப்படும். இவ்வாறு தேர்வுத்துறை தெரிவித்துள்ளது
.

No comments:

Post a Comment