Saturday 2 February 2013

சேலத்தில் ஆசிரியையின் தலைமுடியை இழுத்த பிளஸ்-1 மாணவர் விஷம் குடித்ததாக பரபரப்பு



          சேலம் கந்தம்பட்டியை சேர்ந்தவர் சோலையப்பன். பெயிண்டர். இவரது மகன் விஜயகுமார் (16). இவர் சிவதாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். வழக்கம் போல் நேற்று பள்ளிக்கு சென்ற மாணவர் விஜயகுமார் ஒரு ஆசிரியையின் தலைமுடியை பிடித்து
இழுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அந்த ஆசிரியை தலைமை ஆசிரியர் எழில்மணியிடம் புகார் கூறினார். அவர் மாணவர் விஜயகுமாரை அழைத்து நாளை உனது தந்தையை அழைத்து வா என்று கூறியுள்ளார்.
                         
இதனால் வீட்டிற்கு வந்த மாணவர் விஜயகுமார் தன்னை தலைமை ஆசிரியர் திட்டியதால் தான் சாணி பவுடர் குடித்ததாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன பெற்றோர் மாணவர் விஜயகுமாரை சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர்பின்னர் அவர் வீடு திரும்பினார். விசாரணையில் அவர் சாணி பவுடர் குடிக்கவில்லை என்று தெரிந்தது. இதே போல் மாணவர் விஜயகுமாரை அவரது தந்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு திட்டியுள்ளார்இதனால் மனம் உடைந்த மாணவர் கடந்த 24-ந் தேதி பெயிண்டர் அடிக்க பயன்படும் தின்னரை எடுத்து குடித்து உள்ளார். மேலும் இவர் 10-ம் வகுப்பு படிக்கும் போது பெனாயில் குடித்து இருக்கிறார். இது குறித்து கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்
.

No comments:

Post a Comment